தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 19-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 19-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

Published:Updated:
தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 19-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்
தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 19-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்
0Comments
Share

தினப் பலன்
அக்டோபர் - 19 - வியாழக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

ரிஷபம்:

சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

மிதுனம்:

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டு.

கடகம்:

தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஆனால், தாய்மாமனின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

சிம்மம்:

அரசாங்கக் காரியங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி:

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

காரியங்களில் பொறுமை தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின்  உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். நீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

விருச்சிகம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். 

மகரம்:

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது. சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:

தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.