ஊழல், சர்வாதிகாரி, கிரிமினல்... நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்தைகள் இவைதான்!

மக்களவையிலும் , மாநிலங்களவையிலும் பயன்படுத்த கூடாத வார்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டு இருக்கிறது.

Published:Updated:
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
0Comments
Share

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை18 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கிறது. அவை ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரி, சர்வாதிகாரம் , சகுனி, அழிவு சக்தி, காலிஸ் தானி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தகூடாத வார்தைகளாக அறிவித்திருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மேலும் பயனற்றது, ரத்தக்களரி,ஏமாற்றினார், இரட்டைவேடம், குழந்தைத்தனம்,கிரிமினல், கோழை, முதலைக்கண்ணீர், அவமானம், கழுதை, ரவுடித்தனம்,போலித்தனம் , தவறாக வழிநடத்துதல் , பொய் , உண்மையல்ல, முட்டாள் தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட், போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாத வார்தைகள் பட்டியலில் சேர்த்து அதை ஒரு புத்தகமாக மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடப்பெற்றிருக்கிறது. இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் சபை தலைவர்கள் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கின்றனர்.