``பலர் ஹாலிவுட் செல்ல விரும்புவர்; நான் தென்னிந்தியாவிற்கு செல்ல விரும்புகிறேன்"- சல்மான் கான்

தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தால் வசூலில் ரூ.4000 கோடியை எளிதில் எட்ட முடியும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சிரஞ்சீவியுடன் சல்மான் கான்
சிரஞ்சீவியுடன் சல்மான் கான்
0Comments
Share

பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பவர் சல்மான் கான். பிக் பாஸ் படப்பிடிப்பு படங்களுக்கான படப்பிடிப்புகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் சிரஞ்சீவியும், சல்மான் கானும் இணைந்து நடித்துள்ள காட் ஃபாதர் படம் வரும் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் வேலையில் இரு நடிகர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மும்பையில் நடிகர் சல்மான் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அதில், மக்கள் ரூ300-400 கோடியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்தால் பட வசூலில் ரூ.3000-4000 கோடி வரை எட்ட முடியும். அதோடு அதிகமான ரசிகர்களையும் சென்றடைய முடியும். மக்கள் ஹாலிவுட் செல்லவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நான் தென்னிந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் எவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். எனது ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தைப் பார்ப்பார்கள்.

சிரஞ்சீவியுடன் சல்மான் கான்
சிரஞ்சீவியுடன் சல்மான் கான்

சிரஞ்சீவி ரசிகர்கள் எனது படத்தை பார்ப்பார்கள். இதனால் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். மக்கள் ரூ.300-400 கோடியை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். நாம் ஒன்று சேர்ந்தால் 3000-4000 கோடியை எளிதில் எட்ட முடியும் என்று தெரிவித்தார். இப்படத்தில் சல்மான் கான், சிரஞ்சீவி தவிர நயன்தாரா, சத்யதேவ் ஆகியோரும் நடித்துள்ளார். இதில் சல்மான் கான் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரராக நடித்து கொடுத்துள்ளார். இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துக்கொடுக்க நடிகர் சல்மான் கான் பணம் எதுவும் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளார் நடிகர் சல்மான் கானுக்கு பணம் கொடுக்க சென்ற போது `வேண்டாம்' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். நட்புக்காக இப்படத்தில் நடித்துக்கொடுத்ததாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.