அரசியல்
சமூகம்
அலசல்

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
Comments
Share

சட்டமும் சவடாலுமாகப் பேசும் மாஜியிடம் இடைவெளியைக் கடைப்பிடித்த இலைக் கட்சியின் துணிவானவர், அவரை வீட்டுக்கே வரவழைத்துத் தனி ஆலோசனை நடத்துகிற அளவுக்கு இப்போது நெருங்கியிருக்கிறார். தனக்கு நெருக்கமான வளையத்திலிருந்த சில மாஜிக்கள் சைலன்ட் மோடுக்குப் போனதால், தற்காப்பு நடவடிக்கையாக சவடால் மாஜியை அழைத்து மனமுருகப் பேசினாராம் துணிவானவர். சவடால் மாஜியின் கண்ணசைவில் இயங்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களைத் தாண்டுகிறதாம். அழைத்துப் பேசிய பின்னணிக்கு அதுவும் ஒரு காரணமாம். #பயப்படுறியா குமாரு?!

தீபாவளி நேரத்தில் தீ மற்றும் வெடி விபத்துகள் நேராதபடி தடுக்க, அதிகாரிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறாராம் கோட்டையின் உச்ச அதிகாரி. கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், சில வெடி விபத்துகள் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுக் காட்டி, “இந்த முறை எவ்வித அசம்பாவிதமும் நிகழாதபடி தடுத்துக் காட்டுங்கள்” எனச் சொல்லியிருக்கிறாராம். வெடிக் கடைகளுக்கு 30 விதிமுறைகளைப் பிறப்பித்து, தீயணைப்புத் துறை கெடுபிடி காட்டியதற்குக் காரணமே உச்ச அதிகாரி இந்த விஷயத்தில் காட்டும் அதீத அக்கறைதானாம். #சரவெடி!