ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை

“எதிர்பார்ப்புல மட்டுமே கரையுது எங்க வாழ்க்கை!” - ‘பேரழகன்’ சினேகாவின் கண்ணீர்க் கதை

படத்துல நடிக்கறதுக்கான சம்பளம் முழுசா கிடைக்கணும்னா, நடிகர் சங்கத்துல உறுப்பினராகணும்னு சொன்னாங்க. சங்கத்துல உறுப்பினரா சேர ஒரு லட்சம் ரூவா கட்டச் சொன் னாங்க.

Published:Updated:
சினேகா
பிரீமியம் ஸ்டோரி
சினேகா
Comments
Share

“வாழ்க்கையில கஷ்டம் வரலாம். ஆனா, கஷ்டம் மட்டுமே வாழ்க்கைனா எப்படிங்க சந்தோஷமா இருக்க முடியும்? என் வீட்டுக்காரர், நான், என் மவன், மருமவனு வீட்டுல நாலு பேரும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளிகள்தான். இந்தக் குறைபாட்டுடன், சராசரி மனிதர் களோடு சரிசமமா போட்டிபோட்டு எங்களால பிழைப்பை நடத்த முடியலை. நம்ம கஷ்டத்தைச் சொல்லி உதவியாச்சும் கேட்கலாம்னு முதலமைச்சர்கள், அதி காரிகள், நடிகர் சங்கம்னு ஏறாத படிக் கட்டுகளில்லை. ஆட்டோவுக்கான செலவும் ஆதங்கமும்தான் கூடுச்சே தவிர, ஒரு பலனும் கிடைக்கலை. தலையெழுத்துப்படி நடக்கிறது நடக் கட்டும்னு துணி யாவாரம் பண்ணிட்டிருக் கேன்” - தன் மனக்குமுறலை வருத்தத் துடன் கொட்டித் தீர்க்கிறார் கற்பகம்.