சினிமா
தொடர்கள்

“ரிலீஸ் டென்ஷன்... விஜய் சொன்ன அட்வைஸ்!”

செல்வராகவன் மெசேஜ்ல வாழ்த்துகள் சொன்னார். ‘நன்றி ப்ரோ. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு எதிர்பார்த்தேன். அப்போ கிடைக்கலை’ன்னு ரிப்ளை பண்ணினேன்.

Published:Updated:
ஜி.வி.பிரகாஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.வி.பிரகாஷ்குமார்
Comments
Share

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டச் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் பங்கேற்றார். மாணவ நிருபர்களின் கேள்விகளும் ஜி.வி-யின் சுவாரஸ்ய பதில்களும் இங்கே...

‘‘தேசிய விருது கிடைத்த தருணம் எப்படி இருந்தது?’’

‘‘ஜாலியா இருந்துச்சு. ஏன்னா, விருது அறிவிக்கிறதுக்கு முந்தின நாள் நைட் முழுக்க ஷூட்டிங் இருந்துச்சு. அதிகாலை நாலரை மணிக்கு மேலதான் தூங்கப் போனேன். மறுபடியும் மாலை ஆறு மணிக்கு ஷூட். தூக்கக் கலக்கத்தோடு கார்ல ஸ்பாட்டுக்குப் போயிட்டிருந்தேன். அப்ப சுதாகிட்ட இருந்து போன் வந்ததும், பாதித் தூக்கத்துல பேசினேன். ‘என்ன இப்படிப் பேசுறே... உனக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு. டி.வியை உடனே பாரு'ன்னு சொன்னாங்க. அப்புறம் வீட்டுல என் அப்பா, என் மனைவி யாராலேயும் என்னை ரீச் பண்ண முடியல. அப்படி பிஸியா போன் வந்துட்டே இருந்துச்சு. இப்படி ஒரு மொமன்ட்டை இதுக்கு முன்னாடி அனுபவிச்சதில்லை.

செல்வராகவன் மெசேஜ்ல வாழ்த்துகள் சொன்னார். ‘நன்றி ப்ரோ. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு எதிர்பார்த்தேன். அப்போ கிடைக்கலை’ன்னு ரிப்ளை பண்ணினேன். ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்துக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்’னு அனுப்பினார்.''