மற்ற எபிசோடுகள்

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-1

கதைங்கிறது அன்பு... பாதுகாப்பு... உரையாடல்..!

Published:Updated:
வனிதாமணி
பிரீமியம் ஸ்டோரி
வனிதாமணி
Comments
Share

``அந்தக் காட்டுக்குள்ள கரடி அதுபாட்டுக்கு உலாத்திக்கிட்டு இருந்துச்சு. அப்பிடியே பராக்குப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கும்போது, `இது என்ன இங்கே புதுசாத் தெரியுதே'ன்னு பக்கத்துல போய்ப் பாத்தா, ஒரு மரத்தண்டு மேல ஒரு சின்னப்பையன் உக்காந்து அழுதுகிட்டிருக்கான். `ஏய், என்னாச்சு... ஏன் அழுவுறே..."ன்னு கரடி கேட்டுச்சு. `ஒரு பெரிய பிரச்னை... நான் தொலைஞ்சுபோயிட்டேன்... அதான் அழுகிறேன்'னு பையன் சொன்னான்...’’

கரடியாகவும் பையனாகவும் மாறிக் கதை சொல்லும் வனி அத்தையை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். ஒரு கற்பனை வனத்துக்குள் கரடிக்கும் சிறுவனுக்கும் முன்பாகக் குழந்தைகளை அமரவைத்துக் காட்சிகளை விரிக்கிறார் வனிதாமணி.

வனிதாமணி, குழந்தைகளுக்கான கதைகளைத் தேடிப் பயணித்துக் கொண்டேயிருக்கிறார். கதைகளுக்குள்ளாகவே வாழ்கிறார். குழந்தைகள், `வனி அத்தை', `வனி அத்தை' என அவரைச் சூழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

இன்று கதைகளிலிருந்து அந்நியப்பட்டுவிட்டார்கள் குழந்தைகள். பெரியவர்களுக்கு இணையாகக் குழந்தைகளின் வாழ்க்கையும் பரபரப்பாகிவிட்டது. பள்ளி, பயிற்சியென அவர்களின் நேரங்கள் கரைகின்றன. ஒற்றைத் தலையணையில் படுத்து, அவர்களின் மனதறிந்து தலைகோதி, கதை சொல்லி உறங்கவைக்க இன்றைய இளந்தாய்களுக்கு நேரமுமில்லை பொறுமையுமில்லை. துப்பாக்கி தரித்த ஹீரோக்களும், ரத்தம் தெரிக்கும் ஆன்லைன் கேம்களும் குழந்தைகளின் உலகத்தை அபகரித்துவிட்டன.

இந்தச்சூழலில்தான் கதைகளைச் சுமந்துகொண்டு பள்ளி பள்ளியாக அலைந்துகொண்டிருக்கிறார் வனிதாமணி.

``குழந்தைகளோட மனசுக்குள்ள கதைகள் ஏற்படுத்துற தாக்கம் சாதாரணமானதில்லை. நம்ம தலைமுறை வரைக்கும் அந்தக் கொடுப்பினை இருந்துச்சு. ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிக்கொடுத்தாலும் நிறையாத குழந்தைகளோட மனசு, அம்மாவோ அப்பாவோ பக்கத்துல உக்காந்து உரையாடினா, கதை சொன்னா நிறைஞ்சிடும். கதைங்கிறது அன்பு, பாதுகாப்பு, உரையாடல்...’’ புன்னகையோடு சொல்கிறார் வனிதாமணி.