மற்ற எபிசோடுகள்

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 28

அந்தக் காலத்தில் உணவு என்பது அரிதாகக் கிடைக்கும் விஷயம். உணவுக்காகக் காடுகளிலும் மேடுகளிலும் மனிதர்கள் அலையவேண்டும்

Published:Updated:
ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
ஆரோக்கியம் ஒரு பிளேட்
Comments
Share

உடல் பருமன் பற்றி, கடந்த வாரம் விரிவாகப் பார்த்தோம். அதைக் குறைப்பதற்காக மக்கள் கடைப்பிடிக்கும் வினோதமான பழக்கவழக்கங்களையும் அலசினோம். அடுத்து, உடல் பருமனுக்கு ஏற்ற சரியான உணவுமுறையை அறியவேண்டும். அதற்கு முன்பாக, உடல் பருமன் ஏற்படுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

உடலில் அதிக அளவில் கொழுப்பு தேங்கியிருக்கும் நிலையையே நாம் உடல் பருமன் என்கிறோம் என்று பார்த்தோம். இந்தக் கொழுப்பு நம் உடலில் எதற்காக அதிக அளவில் தங்குகிறது? இதைப் பற்றியும்கூட முன்பே பார்த்துள்ளோம். கொழுப்பு நம் உடலில் கெடுதல் செய்வதற்காக இருப்பதல்ல. நாம் சாப்பிடும் உணவை வைத்து மட்டுமே நாம் உயிர்வாழ முடியும் என்றிருந்தால், ஓரிரு நாள் உணவு இல்லாத நிலை ஏற்பட்டாலே மனிதன் இறந்துவிடுவான். அதனால், பரிணாம வளர்ச்சியின்படி பெரும்பாலான விலங்குகள் அதன் உடலில் கூடுதல் எரிசக்தியைச் சேமித்து வைக்கும் அமைப்பைக் கொண்டுள்ளன. அதற்குக் காரணமாக இருக்கும் முக்கியமான பொருள்தான் கொழுப்பு. மாவுச்சத்தும் புரதச்சத்தும் நம் உடலுக்கு எரிசக்தியை அளித்தாலும், அதை ஓரளவுக்கு மேல் உடலில் தேக்கிவைக்க இயலாது. அதற்காகவே படைக்கப்பட்டதுதான் கொழுப்பு. மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு எப்போதெல்லாம் உணவு கிடைக்கிறதோ, அதன்மூலம் கிடைக்கக்கூடிய கூடுதல் சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கிவைக்கப்படும். தேவைப்படும் நேரத்தில் உடல் அதைப் பயன்படுத்திக்கொள்ளும்.

சில வருடங்களுக்கு முன் தாய்லாந்து குகை ஒன்றில் குழந்தைகள் 9 நாள்கள் வரை உணவு இல்லாமல் தண்ணீரை மட்டும் குடித்து உயிர் பிழைத்தார்கள். அந்த 9 நாள்கள் அவர்களின் உடலுக்கு சக்தி கொடுத்தது கொழுப்புதான். புரியும்படி சொல்லவேண்டுமென்றால், நல்ல மழை பெய்கையில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்படியே விட்டால் எல்லாத் தண்ணீரும் கடலில் கலந்துவிடும். வறட்சிக் காலத்திலும் நமக்குத் தேவை என்பதற்காக அணைக்கட்டுகளை உருவாக்கி நீரைத் தேக்கி வைத்திருக்கிறோம் அல்லவா, அதுபோலதான் உடல் கொழுப்பும்.