கழுத்து, கைகளில் ஜொலித்த தங்க நகைகள்... பிறந்தநாளில் கவனம் ஈர்த்த திமுக ஒன்றியக்குழுத் தலைவர்!

தங்க நகைகளை உடம்பில் போட்டுக்கொண்டு, ஊர் ஊராக வலம் வந்தபடி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்.

Published:Updated:
வேல்முருகன்
வேல்முருகன்
0Comments
Share

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் வள்ளிமலை வேல்முருகன். இவர், தேர்தல் சமயத்தில்தான் தி.மு.க-வில் ஐக்கியமானார். 'அடிப்படை உறுப்பினராகக்கூட கட்சியில்லாத வேல்முருகன் எடுத்த உடனேயே தலைவரானது எப்படி' என்பது தெரியாமல், இன்று வரை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து, ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் வேலூர் மாவட்ட தி.மு.க-வினர். 'இப்படியொருவர் கட்சியிலிருக்கிறார்' என்பதையே உள்ளாட்சித் தேர்தலில்தான் ஆளுங்கட்சியினர் கண்டுபிடித்தனராம்.

வேல்முருகன்
வேல்முருகன்

கழுத்தில் கொத்துக் கொத்தாக கிலோக்கணக்கில் தங்க செயின்களையும், கைகளில் உருளை போன்ற பிரேஸ்லெட்களையும் அணிந்துகொண்டிருப்பதுதான் வேல்முருகனின் அடையாளம்.

தேர்தலுக்குப் பிறகு பொது இடங்களுக்கு வரும்போதெல்லாம் தன் நகைகளைக் கழற்றிவைத்துவிட்டு முகத்தைக் காட்டத் தொடங்கினார். இந்த நிலையில், நேற்று அவருக்குப் பிறந்தநாள். வழக்கமாக அணியும் நகைகளை அணியவில்லை. அனைத்தும் புதிய நகைகளாக மினுமினுத்தன.

வேல்முருகன்
வேல்முருகன்

சுமார் 500 பவுன் நகைகளை அணிந்துகொண்டு, ஊர் ஊராக வலம் வந்து தனது ஆதரவாளர்களைத் திரட்டி, கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்.