அரசியல்
அலசல்

“மோடி, அண்ணாமலையை பாராட்டுகிறேன்!” - “தி.மு.க-விடம் பழைய வேகம் இப்போது இல்லை!”

- மனம் திறக்கும் துரைமுருகன்!

Published:Updated:
துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்
Comments
Share

அறுபது ஆண்டு அரசியல் அனுபவத்துடன், 10-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன். நாம் அவரைச் சந்திக்கச் சென்றபோது நா.பார்த்தசாரதி எழுதிய ‘குறிஞ்சி மலர்’ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தார். “எனக்கு ரொம்பப் பிடிச்ச புத்தகம்” என்றபடி அதை வைத்துவிட்டு, சரி பேட்டிக்குள் போகலாம்” என்றவரிடம், இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பேசினோம்.

“ஒரு மூத்த அரசியல்வாதியாக, இன்றைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

(அவருக்கே உரித்தான சிரிப்புடன்...) “1962-ல் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது மேடை ஏறிப் பேச ஆரம்பித்த நான், இன்றுவரை அந்தப் பணியைத் தொடர்கிறேன். 1971-லிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியலில் அநேக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கலைஞருடைய தாயார் இறந்தபோது, அவர் வீட்டுக்கு வருவதற்கு முன்பே, அப்போதைய முதல்வர் காமராஜர் சென்றுவிட்டார். அதுதான் அரசியல் பண்பாடு. தேர்தலில் காமராஜர் தோல்வியடைந்தபோது, ‘நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். காமராஜருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியிருக்கக் கூடாது’ என்று தனியாக உட்கார்ந்து அழுதார் அண்ணா. தலைவர்கள், இப்படி கண்ணியமாகவும் மனிதாபிமானத்தோடும் இருந்த காலம் அது. ஆனால், இப்போது கீழ்த்தரமாகப் பேசுவதும், வீண் புகார்களை தொடுப்பதுமாகப் போய்க்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் இருக்கும்வரை தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையே ஓர் அந்நியோன்யம், பரஸ்பர மரியாதை இருந்தது. எல்லோரும் இங்கிருந்து போனவர்கள்தானே... ஆனால், ஜெயலலிதா வந்த பின்பு எல்லாமே மாறின. இப்போது எடப்பாடி வந்ததும் அது இன்னும் தளர்வாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நாகரிக அரசியல் மீண்டும் வர வேண்டும்.”