சினிமா

“இளையராஜா இல்லையென்றால் நான் இங்கே வந்திருக்க முடியாது!” - பா.ரஞ்சித்

கதாநாயகர்கள் எங்கேயிருந்து வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமானது. இத்தனை ஆண்டு தமிழ் சினிமாவில் யார் ஹீரோவாக இருந்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan
Comments
Share

பேட்டி என்ற பதம் இயக்குநர் பா.இரஞ்சித்துடனான சந்திப்புகளுக்குப் பொருந்தாது. தன்மையான நண்பருடனான உரையாடலாகவே ஒவ்வொரு சந்திப்பும் நினைவில் நிற்கும். ஐந்தே படங்களில் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவரின் ‘அட்டகத்தி' வெளிவந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்து திரை காணக் காத்திருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்திலிருந்து தொடங்குகிறது பேச்சு.

‘‘ ‘நட்சத்திரம் நகர்கிறது' காதல் படம் அல்ல; காதல் பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்திற்குத் தெரியும்போது சமூகத்தின் பிரச்னையாக மாறுது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிப் பிணைந்ததாக இருக்கு. காதல் பர்சனலாக இருக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. இப்ப காதலை ஒரு political term ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதைப்பற்றி விவாதிக்கிற படம்தான் இது.

இதில் வெறும் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாமல், ஒரு பாலினக் காதலும் இருக்கு. அவங்களை இதில் முக்கியமாகக் காண்பிக்கவில்லை. திருநங்கையின் காதலும் இருக்கு. பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக் கூடுகிற நடிகர்கள், காதல் பற்றி ஒரு நாடகம் தயாரிக்க நினைக்கிறார்கள். அந்த நாடகத்தைப் பற்றிய விவாதம், எப்படி எடுக்கிறாங்க, அதை எடுக்க முடிந்ததா, இல்லையா, அந்த நாடகத்தை எடுத்து முடிப்பதற்குள் அவர்களிடையே வருகிற எமோஷன்ஸ், காதலை விவாதிக்கிறது இந்தப் படம். ஒரு காதலைக் குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கிறது என இந்தப் படம் முழுக்கப் பேசுகிறோம். காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், வினுஷா, ஹரி, சார்லஸ் வினோத்னு பலர் இருக்காங்க. அவங்களைச் சம அளவில் கொண்டு வந்திருக்கேன். முக்கியமாக படம் இளைஞர்களை மையப்படுத்தியே இருக்கு.’’