Exclusive: "48 மணி நேரத்துக்கு முன்னாடிதான் தெரியும்" - தொகுப்பாளர் பாவனா

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியலைன்னு நான் மட்டுமே தொகுத்து வழங்கினேன்.

Published:Updated:
பாவனா
பாவனா
0Comments
Share
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை பாவனா தொகுத்து வழங்கியிருந்தார். அந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.
பாவனா
பாவனா

ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது. நான் நல்லா பண்ணுவேன் என்கிற நம்பிக்கையில் என்கிட்ட துணிந்து இந்தப் பொறுப்பை கொடுத்ததற்காக முதலமைச்சர், பிரதமருடைய அலுவலக உறுப்பினர்களுக்குத் தான் என் முதல் நன்றியைத் தெரிவிச்சிக்கணும். ஆரம்பத்தில் நானும், சாரு சர்மா சாரும் இணைந்து தொகுத்து வழங்குற மாதிரி இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய ஈவென்ட். அது நம்ம நாட்ல அதுவும் நம்ம சென்னையில் நடக்குறது மிகப்பெரிய விஷயம்.

பாவனா
பாவனா

கிரிக்கெட்டில் வேர்ல்ட் கப் மேட்ச் ஓப்பனிங் நம்ம ஊரில் நடந்தா நமக்கு எவ்வளவு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்குமோ அப்படித்தான் இந்த நிகழ்வும். 188 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துக்க வந்திருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம். இதுக்காக பல மாதங்களாக பலர் ஹார்ட் ஒர்க் பண்ணியிருந்தாங்க. அவங்களுடைய உழைப்பிற்கான பிரதிநிதியாகத்தான் மேடையில் நின்று இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன்.

இதுவரை எத்தனையோ ஈவென்ட் பண்ணியிருந்தாலும் 50 பேர் முன்னாடி பேசணும்னாலும் கொஞ்சம் பதட்டம் எனக்குள்ள இருக்கும். ஆனா, நேற்று எனக்கு எந்தப் பதட்டமும் இல்ல. கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம். என்னைப் பொறுத்தவரை கடவுளே என் கையைப் பிடிச்சு நின்னு, நிகழ்ச்சியை தைரியமா பண்ண வச்ச மாதிரிதான் உணர்கிறேன். துளி அளவு கூட நான் பதட்டப்படவே இல்ல. ரொம்ப ரிலாக்ஸா இருந்தேன். அந்த மேடையில் லிடியன் நாதஸ்வரத்திடம் பேசிட்டு நடந்து வரும்போது ஜேம்ஸ் வசந்தன் சார் அவருடைய டீமுடன் அங்கே இருந்தார். அவர் என்னைப் பார்த்து, 'பாவனா சூப்பரா பண்ற, அற்புதம்!'ன்னு சொன்னார். அந்த நேரத்தில் அவர் சொன்ன அந்த வார்த்தை மிகப் பெரிய பூஸ்ட் ஆக இருந்தது. பல பிரபலங்கள் பாராட்டினாங்க. வெவ்வேறு நாடுகளில் இருந்து போட்டியில் கலந்துகொள்ள வந்த பலர் என்னுடைய ஆங்கில உச்சரிப்பு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. இந்த நிகழ்வை கண்டிப்பா நான் தொகுத்து வழங்கப் போகிறேன் என்கிற தகவல் எனக்கு 48 மணி நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும். ஸ்கிரிப்ட் எல்லாம் கடைசி நேரத்தில் தான் பார்த்தேன். தயார் ஆகுற அளவுக்கான டைம் எல்லாம் இல்ல.

பாவனா
பாவனா

காஸ்டியூம் பொறுத்தவரை என் அம்மாவுக்கு தான் நன்றி சொல்லணும். அவங்களே ஸ்டேஜ் இந்தக் கலரில் தான் இருக்கும்னு முன்னாடியே யூகித்து பிங்க் நிறம் தான் செட்டாகும்னு சொன்னாங்க. அதே மாதிரி சேலைதான் கட்டப் போகிறேன்னு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டேன். அம்மாவே சேலையும் ரெடி பண்ணி வச்சிருந்தாங்க. செஸ் கட்டம் மாதிரியான பார்டரில் அம்மா செலக்ட் பண்ணின புடவையைத்தான் கட்டினேன். அது ரொம்ப நல்லா ஒர்க்அவுட் ஆச்சு. எப்பவும் என் பிழையை சுட்டிக் காட்டுறது என் குடும்பம்தான்! அதே மாதிரி இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டும் அம்மா, அப்பா, பாட்டி பிழையை மறக்காம சுட்டிக் காட்டினாங்க.

பலருக்கும் நான் இவ்ளோ ஆங்கிலம் பேசுவேன்னும் தெரியாது. இப்படி தமிழ் உச்சரித்து பேசுவேன்னும் தெரியாது! அதனால பலரும் ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்கன்னு சொன்னாங்க. நம்மளுடைய ஃபாலோயர்ஸ், நம்மளுடைய ஃபேமிலி, நண்பர்கள்னு பிடிச்சவங்க நம்மளைப் பாராட்டி பேசுறது வேற ; ஆனா, நம்மளை ஃபாலோ பண்ணாதவங்க நம்ம ஒர்க் பார்த்துட்டு பக்கம், பக்கமா எழுதி பாராட்டுறாங்கன்னு பார்க்கும்போது அது ரொம்ப மனசுக்கு நெருக்கமா இருந்துச்சு.

பாவனா
பாவனா

நம்மகிட்ட இருந்து தான் செஸ் விளையாட்டு உருவானதுங்கிற விளக்கத்தை முதலமைச்சர் சொல்லும்போதும் சரி, இந்தியாவின் செஸ் பவர் ஹவுஸாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இந்த மாநிலத்தில் இருந்து உருவானவர்கள்னு முதல்வர் சொல்லும்போதும் சரி ரொம்ப பெருமையா இருந்துச்சு! நம்ம ஊர், நம்ம மக்கள், நம்ம கேம் அதை நாம தொகுத்து வழங்குறோம்னு சந்தோஷமாகவும் இருந்தது என்றார். சமூகவலைதள பக்கங்களில் பலரும் தொடர்ந்து பாவனாவை பாராட்டி வருகின்றனர். அவருடைய உச்சரிப்பும் சரி, அவர் தொகுத்து வழங்கிய முறையும் சரி பலருக்கும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது!