``ரெண்டு பசங்க இருக்காங்க, அவங்களை வளர்க்குற பொறுப்பு என்னுடையது!'' - லைலா

2 Min Read

சில நேரங்கள்ல ஜோவை கூட்டிட்டுப் போக சூர்யா ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார்

Published:Updated:
நடிகை லைலா
நடிகை லைலா
0Comments
Share

``தமிழ் சினிமாவுக்கு வந்து 16 வருஷமாச்சு. ஹீரோயினோட அம்மா, சிஸ்டர் ரோல்கள்ல நடிக்கக் கேட்டாங்க. சீரியல் வாய்ப்பும் வந்தது. ஆனா, நல்ல கதையம்சம் உள்ள படத்துல முக்கியமான ரோல்ல நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்போ அது நிறைவேறியிருக்கு. `சர்தார்' படத்தின் மூலமா ரீ என்ட்ரி கொடுக்குறேன்" கன்னக்குழி சிரிப்புடன் பேசத் தொடங்கினார் நடிகை லைலா. `நந்தா', `பிதாமகன்' எனப் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது `சர்தார்' படத்தில் நடித்திருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை லைலா
நடிகை லைலா

`சர்தார்' படம் எப்படி அமைஞ்சது?

``என்கிட்ட டைரக்டர் மித்ரன் கதை சொன்னப்போ ரொம்ப பிடிச்சிருந்தது. கதை சுவாரசியமா இருந்தது. மித்ரன் சார் மேஜிக் மாதிரி ஸ்க்ரிப்ட் வெச்சிருந்தார். ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் இப்படி எல்லாமே திரைகதைல அமைஞ்சு இருந்தது. முதல் நாள் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் பதட்டமா இருந்தது. ஏன்னா, 16 வருஷத்துக்கு அப்புறம் நடிக்கப் போறேன்னு எக்ஸைட்மென்ட் இருந்தது. எப்போதும் சினிமா ரொம்ப பிடிக்கும். ஐ லவ் சினிமா. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரிகர்சல் பண்ணிட்டே இருந்தேன். டயலாக் பேப்பரை கையில் வெச்சிக்கிட்டு படிச்சிட்டே இருந்தேன். ஐ லவ் ஆக்டிங்.

``சூர்யா கூட ஹீரோயினா நடிச்சிருக்கிங்க; இப்போ கார்த்திகூட நடிச்ச அனுபவத்தைப் பத்திச் சொல்லுங்க?"

``சூர்யா எனக்கு நல்ல ப்ரெண்ட் . கார்த்தியும் நல்ல நட்பா பழகுனார். என்னுடைய சினிமா கரியர் கார்த்திக்கிட்ட இருந்து இப்போ ரீ-ஸ்டார்ட் ஆகுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நானும், கார்த்தியும் பேசிக்கிட்டே இருப்போம். ப்ரீ டைம்ல கேம் விளையாடிக்கிட்டு இருப்பேன். நிறையப் பேரை ப்ராங்க் பண்ண ரொம்பப் பிடிக்கும். பட், ஸ்பாட்ல கார்த்தியை ப்ராங்க் பண்ண முடியல."

``ஏன் இந்த 16 வருட இடைவெளி?"

நடிகை லைலா
நடிகை லைலா

``எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்கள வளர்க்குற பொறுப்பு என்னுடையது. இதனால, சினிமாவுக்கு இடைவெளி விட்டுடேன். என்னுடைய கணவரும் மும்பைதான். பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கார். வீட்டுல சில பொறுப்புகள் இருந்தனால சினிமால இருந்து விலகியிருந்தேன். இப்போ, நடிக்க வந்ததுக்கு பெரிய சப்போர்ட் பண்ணுனாங்க."

``தமிழ் சினிமால, என்ன வித்தியாசத்தை இப்போ உணர்ந்தீங்க?"

``நிறைய வித்தியாசங்களை உணர முடியுது. குறிப்பா, டைரக்டர்ஸ் கொண்டு வர்ற கதைகள் வித்தியாசமா இருக்கு. மரத்தைச் சுத்தி ஹீரோ மற்றும் ஹீரோயின்ஸ் பாட்டு பாடுற டூயட் மாதிரி இல்லாம இருக்கு. குறிப்பா, ஹீரோ மற்றும் ஹீரோயின்ஸ் தாண்டி எல்லாருக்கும் முக்கியத்துவம் கதையில இருக்கு. இது எனக்கு நடிக்க ரொம்ப உந்துதலா இருக்கு. ஆடியன்ஸ் மாற்றத்துக்குரிய சினிமாக்களை மக்கள் வரவேற்கிறாங்க!"

``ஜோதிகா, சூர்யா ரெண்டு பேர்கூடவும் நடிச்சுருக்கிங்க, அவங்க லவ் ஸ்டோரியை முதல்ல உங்ககிட்ட யார் சொன்னாங்க?

சூர்யா
சூர்யா

``ஐ திங் ஜோதிகா தான் சொன்னாங்கன்னு நினைக்கிறேன். 'த்ரி ரோசஸ்' படத்துல ஜோதிகாகூட நடிச்சேன். அப்போ, அவங்களோட லவ் ஸ்டோரியைச் சொன்னாங்க. சில நேரங்கள்ல ஜோவை பிக் பண்றதுக்கு சூர்யா ஸ்பாட்டுக்கு வருவார். சூர்யா எனக்கு ஃபேமிலி ப்ரெண்ட். அவங்க குடும்பத்துல நான் இன்னும், சிவகுமார் சார் கூட மட்டும்தான் நடிக்கல. அதுவும் சீக்கிரம் நடந்துரும்."